sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

புலிப்பாக்கத்தில் பால்குட ஊர்வலம்

/

புலிப்பாக்கத்தில் பால்குட ஊர்வலம்

புலிப்பாக்கத்தில் பால்குட ஊர்வலம்

புலிப்பாக்கத்தில் பால்குட ஊர்வலம்


ADDED : மே 18, 2025 10:49 PM

Google News

ADDED : மே 18, 2025 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், புலிப்பாக்கம் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான வசந்த கால உத்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.

முன்னதாக, காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு நெல், பால், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

தொடர்ந்து, விரதமிருந்த பக்தர்கள் கங்கையம்மன் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு, ஊர்வலமாக மாட வீதி வழியாக திரவுபதி அம்மன் கோவிலை சென்றடைந்தனர்.

பின், பக்தர்கள் வரிசையாக நின்றவாறு அம்மனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்து வழிபட்டனர். பின், பகல் 1:30 மணிக்கு, தேன்சுவை சொல்லரசி அழகானந்தல் புனிதவதியின் மகாபாரத சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் வீதியுலா நடந்தது.






      Dinamalar
      Follow us