/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வீட்டுவசதி வாரியம் கட்டவுள்ள 12 அடுக்கு மாடி அடிக்கல் நாட்டிய அமைச்சர் காந்தி
/
வீட்டுவசதி வாரியம் கட்டவுள்ள 12 அடுக்கு மாடி அடிக்கல் நாட்டிய அமைச்சர் காந்தி
வீட்டுவசதி வாரியம் கட்டவுள்ள 12 அடுக்கு மாடி அடிக்கல் நாட்டிய அமைச்சர் காந்தி
வீட்டுவசதி வாரியம் கட்டவுள்ள 12 அடுக்கு மாடி அடிக்கல் நாட்டிய அமைச்சர் காந்தி
ADDED : ஏப் 19, 2025 12:27 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட செவிலிமேடு அருகே பல்லவன் நகர் உள்ளது. இங்கு, அரசு ஊழியர்களுக்கு கட்டப்பட்டிருந்த வீட்டுவசதி வாரிய குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, வேலுார் வீட்டு வசதி வாரியம் பிரிவு சார்பில், பன்னடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தில், 12 தளங்கள் கொண்ட குடியிருப்புகள் 60.70 கோடி ரூபாய் மதிப்பில் கட்ட திட்டமிடப்பட்டது.
இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, பல்லவன் நகரில் நேற்று நடந்தது.
இதில், கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று, கட்டட பணிக்கு அடிக்கல் நாட்டினார். ஒரு பரப்பளவிலான இந்த இடத்தில், 1.05 லட்சம் சதுரடி கொண்ட அடுக்குமாடி கட்டப்பட உள்ளது.
குடியிருப்புகளில் 48 இரண்டு படுக்கை அறை கொண்ட வீடுகள் 71.31 -- 78.97 லட்ச ரூபாய் மதிப்பிலும், 35 மூன்று படுக்கை அறை கொண்ட வீடுகள் 99.1 லட்சம் மதிப்பிலும் என, மொத்தம் 83 குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., - எம்.எல்.ஏ., எழிலரசன், மேயர் மகாலட்சுமி, ஒன்றியக் குழுத் தலைவர் மலர்கொடி மற்றும் வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் என பலர் பங்கேற்றனர்.