sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மாயமான காவலாளி ஏரி கால்வாயில் சடலமாக மீட்பு

/

மாயமான காவலாளி ஏரி கால்வாயில் சடலமாக மீட்பு

மாயமான காவலாளி ஏரி கால்வாயில் சடலமாக மீட்பு

மாயமான காவலாளி ஏரி கால்வாயில் சடலமாக மீட்பு


ADDED : அக் 09, 2025 11:15 PM

Google News

ADDED : அக் 09, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:மாயமான தனியார் தொழிற்சாலை காவலாளி, காட்டுகொல்லை நாஞ்சிபுரம் ஏரி கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார்.

உத்திரமேரூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, காட்டுகொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன், 48; தனியார் தொழிற்சாலை காவலாளி. இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல, சாத்தமை பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்றார்.

வேலை முடிந்து இரவு 8:00 மணிக்கு வீட்டிற்கு வரவேண்டியவர், இரவு 9:00 மணி ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால், குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடினர்.

இந்நிலையில், தேவேந்திரன் காட்டுகொல்லை கிராமத்தில், பாப்பநல்லுார் செல்லும் சாலையோரம் உள்ள, நாஞ்சிபுரம் ஏரி கால்வாயில், இரவு 9:30 மணிக்கு, இறந்த நிலையில் மீட்கப்பட்டார்.

உத்திரமேரூர் போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து, உத்திரமேரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us