/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சாலையில் சிதறிய ஜல்லியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
சாலையில் சிதறிய ஜல்லியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் சிதறிய ஜல்லியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
சாலையில் சிதறிய ஜல்லியால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : மார் 19, 2025 12:26 AM

ஸ்ரீபெரும்புதுார்:திருச்சி தேசிய நெடுஞ்சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் நெடுஞ்சாலை, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் நெடுஞ்சாலை உள்ளது.
ஒரடகம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு செல்லும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன.
கனரக வாகனங்கள் அதிகம் செல்லும் இந்த சாலையில், புதிதாக தொழிற்சாலை மற்றும் வீடு கட்டுமான பணிக்காக, ஜல்லி கற்களை அளவுக்கு அதிகமாக ஏற்றி செல்லும் லாரிகளில் இருந்து, ஜல்லி கற்கள் சரிந்து, சாலை முழுதும் சிதறி உள்ளது.
இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமபட்டு வருகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள், சாலையில் குவிந்துள்ள ஜல்லியின் மீது செல்லும் போது, எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, அளவுக்கு அதிகமாக ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு செல்லும் லாரிகள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், சாலையில் சிதறியுள்ள ஜல்லி குவியலை அகற்ற நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.