/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
/
சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
ADDED : நவ 21, 2025 01:35 AM

ஸ்ரீபெரும்புதுார்: சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, மாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே, மழைநீர் வடிகால்வாய் மீது உள்ள கான்கிரீட் சிலாப் சேதமடைந்து உடைந்து உள்ளதால், வாகன ஓட்டி கள் விபத்தில் சிக்கும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், நாள்தோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் வாகனங்களால், நெரிசல் மற்றும் வாகன விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
விபத்தை தவிர்க்க, சென்னை -- பெங்களூரு தேசிய நான்குவழிச் சாலையை, ஆறுவழிச் சாலையாக அகலப்படுத்தவும், 18 இடங்களில் சிறுபாலங்கள் மற்றும் மூன்று இடங்களில் மேம்பாலங்கள் அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டது.
இதற்காக, 654 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, மூன்று பிரிவுகளாக ஒப்பந்தம் விடப்பட்டது. இதன்படி, மதுரவாயல் -- ஸ்ரீபெரும்புதுார் வரை, 23 கி.மீ., ஸ்ரீபெரும்புதுார் - - காரப்பேட்டை வரையில், 34 கி.மீ., காரப்பேட்டை - வாலாஜாபேட்டை வரையில், 36 கி.மீ., துாரம் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.
மாம்பாக்கம், சுங்குவார்சத்திரம், சேந்தமங்கலம், பிள்ளைசத்திரம் ஆகிய இடங்களில் 2021ம் ஆண்டு துவங்கிய மேம்பாலங்களின் கட்டுமான பணிகள், கால அவகாசம் நிறைவடைந்தும் முடிக்கப்படாமல் உள்ளன.
இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த மாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே, காஞ்சிபுரத்தில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் மார்க்கமாக, சாலையோர மழைநீர் வடிகால்வாய் மீது உள்ள கான்கிரீட் சிலாப் சேதமடைந்து உடைந்து உள்ளது.
இதனால், தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக வரும் வாகனங்கள், திறந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயில் விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, மழைநீர் வடிகால்வாயை சீரமைக்க, தேசிய நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

