sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 சிமென்ட் கல் நடைபாதை சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

 சிமென்ட் கல் நடைபாதை சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 சிமென்ட் கல் நடைபாதை சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

 சிமென்ட் கல் நடைபாதை சேதம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : ஜன 03, 2026 05:22 AM

Google News

ADDED : ஜன 03, 2026 05:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குருவிமலை: காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை கிராமத்தில், சேதமடைந்த நிலையில் உள்ள சிமென்ட் கல் நடைபாதையை சீரமைக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம் - உத்திர மேரூர் சாலை, களக் காட்டூர் ஊராட்சி, குருவிமலை கிராம சாலையோரம், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சிமென்ட் கல் பதிக்கப்பட்ட நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இச்சாலை வழியாக கட்டுமான பணிக்கு எம்.சாண்ட் மணல், ஜல்லி கற்கள் ஏற்றி சென்ற கனரக வாகனங்களால், நடைபாதையில் பதிக்கப்பட்டு இருந்த சிமென்ட் கற்கள் உடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இதனால், இரவு நேரத்தில், இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும் போது, நடைபாதையில் மழைநீர் தேங்கியுள்ள பள்ளத்தால், நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, விபத்தை தவிர்க்கும் வகையில், குருவிமலை கிராம சாலையோரம் சேதமடைந்த சிமென்ட் கல் நடைபாதையை சீரமைக்க, நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இருசக்கர வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us