/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
/
வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
வர்ணம் பூசப்படாத வேகத்தடை விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : செப் 21, 2024 01:23 AM

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் கீரை மண்டபம் பகுதியில் இருந்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம், போலீஸ் எஸ்.பி., அலுவலகம் மட்டுமின்றி, வந்தவாசி சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்வோர், வளத்தீஸ்வரன் கோவில் தெரு வழியாக சென்று வருகின்றனர்.
வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், தனியார் மருத்துவமனை அருகில், விபத்து ஏற்படுவதை தவிர்க்க வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது.
வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசப்படாததாலும், வேகத்தடையின் மீது இரவில் ஒளி பிரதிபலிப்பான் ஒட்டப்படாமல் உள்ளது. இச்சாலையில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
குறிப்பாக, இரவு நேரத்தில் இப்பகுதியில் போதுமான வெளிச்சம் இல்லாததால், இருசக்கர வாகன ஓட்டிகள், வேகத்தடையை கவனிக்காமல் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குவதாக, அப்பகுதியினர் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே, வேகத்தடைக்கு வெள்ளை நிற வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.