sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நெடுஞ்சாலையில் மரண பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

/

நெடுஞ்சாலையில் மரண பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

நெடுஞ்சாலையில் மரண பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

நெடுஞ்சாலையில் மரண பள்ளம் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்


ADDED : அக் 21, 2025 11:46 PM

Google News

ADDED : அக் 21, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: வண்டலுார் -- வாலாஜாபாத் சாலையில் ஏற்பட்டுள்ள மரண பள்ளங்களால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, காஞ்சிபுரம் -- பாலுார் உள்ளிட்ட முக்கிய சாலைகளை இணைக்கும் சாலையாக, வண்டலுார் - - வாலாஜாபாத் நெடுஞ்சாலை உள்ளது.

ஒரகடம், வல்லம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட சிப்காட் தொழிற்பூங்காவில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஊழியர், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து, வாகனங்களில் தினமும் இந்த சாலை வழியே சென்று வருகின்றனர்.

போக்குவரத்து அதிகம் உள்ள இந்த முக்கிய சாலையில், செரப்பனஞ்சேரி பேருந்து நிறுத்தம் அருகே, சாலையின் பல்வேறு இடங்களில் பெரிய, பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.

இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இரவு நேரங்களில் வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் சிக்கி விழுந்து விபத்து ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.

எனவே, சாலையை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us