/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மண் அரிப்பால் சாலையோர பள்ளம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
/
மண் அரிப்பால் சாலையோர பள்ளம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
மண் அரிப்பால் சாலையோர பள்ளம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
மண் அரிப்பால் சாலையோர பள்ளம் சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 28, 2025 11:47 PM

செவிலிமேடு: செவிலிமேடு - கீழம்பி புறவழிச்சாலையில், கீழ்கதிர்பூரில் மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்
காஞ்சிபுரம், செவிலிமேடு பாலாறு பாலத்தில் இருந்து, கீழம்பி செல்லும் புறவழிச்சாலை உள்ளது.
உத்திரமேரூர், வந்தவாசி உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து வேலுார், பெங்களூரு, அரக்கோணம், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள், காஞ்சிபுரம் நகருக்குள் செல்லாமல் கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இச்சாலையில், கீழ்கதிர்பூர் அருகில், மழை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு சாலையோரம் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
புறவழிச்சாலை என்பதால், பைக்கில் செல்லும் வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
எனவே, கீழ்கதிர்பூரில் மண் அரிப்பால் சாலையோரம் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

