sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 ஏகாம்பரநாதருக்கு புதிய தங்கத்தேர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

/

 ஏகாம்பரநாதருக்கு புதிய தங்கத்தேர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

 ஏகாம்பரநாதருக்கு புதிய தங்கத்தேர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு

 ஏகாம்பரநாதருக்கு புதிய தங்கத்தேர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைப்பு


ADDED : டிச 08, 2025 07:03 AM

Google News

ADDED : டிச 08, 2025 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை மூலம், புதிதாக செய்யப்பட்ட தங்க தேரை, காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், அறக்கட்டளை நிர்வாகிகள், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் நேற்று முன்தினம் இரவு ஒப்படைத்தனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக தங்கத்தேர் செய்ய வேண்டும் என்ற பக்தர்கள் கோரிக்கையை ஏற்று, காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் அருளானையின்படி, ஏகாம்பரநாதர் இறைப்பணி அறக்கட்டளை சார்பில், பர்மா தேக்கு மரத்தில், மரத்தேர் செய்யப்ப்டடது.

மரத்தேரின் மீது, தாமிர, தங்க தகடுகள் பொருத்தப்பட்டு, தங்க தேர் செய்யப்பட்டது. புதிதாக செய்யப்பட்ட தங்க தேரின் வெள்ளோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் வெள்ளோட்டத்தை துவக்கி வைத்தார். ஓரிக்கை மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் இருந்து, பல்வேறு வீதி வழியாக ஏகாம்பரநாதர் கோவிலுக்கு தங்க தேர் வந்தடைந்தது.

அங்கு ஏகாம்பரநாதர் கோவில் நிர்வாகத்திடம் தங்கத்தேர் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதிபதிகள் சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடா திபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில், ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை நிர்வாகிகள், தமிழக ஹந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் தங்க தேரை ஒப்படைத்தனர்.

இந்நிகழ்ச்சியில், கைத்தறி துறை அமைச்சர் காந்தி, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, தி.மு.க., - எம்.எல்.ஏ., க்கள் உத்திரமேரூர் சுந்தர், காஞ்சிபுரம் எழிலரசன், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், ஏகாம்பரநாதர் இறைபணி அறக்கட்டளை நிர்வாகி மகாலட்சுமி சுப்பிரமணியம், உறுப்பினர்கள் வலசை ஜெயராமன், பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us