sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

முதல் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை

/

முதல் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை

முதல் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை

முதல் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை


ADDED : மார் 20, 2024 10:00 PM

Google News

ADDED : மார் 20, 2024 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:லோக்சபா தேர்தலுக்கான அறிவிப்பு, மார்ச்- 17ம் தேதி வெளியானது. அதே நாளில், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 20ம் தேதி முதல், மார்ச் 27ம் தேதி வரையில் மனு தாக்கல் செய்யலாம். மார்ச் 28ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.

மார்ச் 30ம் தேதி மனுக்கள் வாபஸ் பெறலாம். ஏப்.,19ல் ஓட்டுப்பதிவும், ஜூன் 4ல் ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

நேற்று, சுபமுகூர்த்த நாள் என்பதால், ஓரிரு வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என, எதிர்பார்க்கப்பட்டன. இதை பொய்யாக்கும் விதமாக, நேற்று ஒரு வேட்பாளர் கூட வேட்பு மனு தாக்கல் செய்ய வரவில்லை.

நேற்று, ஒரே நேரத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை அறிவிக்கப்பட்டதால், நாளை மற்றும் திங்கள் ஆகிய இரு தினங்களில், ஏதேனும் ஒரு தினத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என, கட்சி வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் அலுவலரான கலெக்டர் அருண்ராஜ், நேற்று மனுக்கள் பெற, கலெக்டர் அலுவலகத்தில் தயாராக இருந்தார். ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை.

ஆனால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வேட்பு மனுக்கள் பிரிவில் இருந்த தேர்தல் அலுவலர்களிடம், தி.மு.க., சார்பில் போட்டியிடும் டி.ஆர்.பாலுவிற்கான வேட்பு மனு வாங்கிச் சென்றனர்.

அதன் பின், நாம் தமிழர் மற்றும் சுயேச்சைகள் என, 11 பேர் வேட்பு மனுக்கள் வாங்கி சென்றனர். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய யாரும் வராததால், கலெக்டர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.






      Dinamalar
      Follow us