/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கிடங்கு மேலாண்மை பயிற்சிகள் அறிவிப்பு
/
கிடங்கு மேலாண்மை பயிற்சிகள் அறிவிப்பு
ADDED : அக் 25, 2024 10:31 PM
காஞ்சிபுரம்:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு, பல்வேறு திறன் அடிப்படையிலான தொழில் பயிற்சி திட்டங்களை, தாட்கோ எனப்படும் தமிழக ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கிடங்கு மேலாண்மை பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சிக்கு டிப்ளமா அல்லது ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சியும், கிடங்கு சம்பந்தமான பேக்கர் பயிற்சிக்கு 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, தொழிற்பயிற்சி ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்பவர்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சி முடித்தவுடன் பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com மூலம் பதிவு செய்யலாம் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.