ADDED : அக் 02, 2024 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
படப்பை:படப்பை அருகே வஞ்சுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, 60. பஞ்சர் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தின் வண்டலுார்- - வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், வஞ்சுவாஞ்சேரி பகுதியில் சாலையை நடந்து கடந்தார்.
அப்போது அந்த வழியே வேகமாக சென்ற டிப்பர் லாரி, சின்னசாமி மீது மோதியது. இதில் சின்னசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

