/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
பிப்., 24ல் ராஜகுளத்தில் வரதர் தெப்போற்சவம்
/
பிப்., 24ல் ராஜகுளத்தில் வரதர் தெப்போற்சவம்
ADDED : பிப் 21, 2024 10:15 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, ராஜகுளம் கிராமத்தில், மாசி மாத பவுர்ணமி தினத்தன்று, வரதர் தெப்போற்சவம் நடைபெறும்.
நடப்பாண்டு, பிப்.,24ம் தேதி அன்று, அதிகாலை 4:00 மணிக்கு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் புறப்பட்டு, வையாவூர், கவுரியம்மன் பேட்டை, சிட்டியம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு சென்ற பின், ராஜகுளம் கிராமத்தைச் சென்றடைவார்.
அங்குள்ள உற்சவ மண்டபத்தில், பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். அதை தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு வரதராஜ பெருமாள் ராஜகுளம் தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை மூன்று முறை வலம் வருவார்.