sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குடிநீர் தொட்டி மாயம் பீடம் மட்டுமே மிச்சம்

/

குடிநீர் தொட்டி மாயம் பீடம் மட்டுமே மிச்சம்

குடிநீர் தொட்டி மாயம் பீடம் மட்டுமே மிச்சம்

குடிநீர் தொட்டி மாயம் பீடம் மட்டுமே மிச்சம்


ADDED : பிப் 22, 2024 11:40 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேல்ஒட்டிவாக்கம், காஞ்சிபுரம் ஒன்றியம், மேல்ஒட்டிவாக்கம் காலனியில், 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியினரின் கூடுதல் குடிநீர் தேவைக்காக, 10 ஆண்டுகளுக்கு முன், மூன்று இடங்களில் சிறு மின்விசைக் குழாயுடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், மூன்றில் ஒரு சிறு மின்விசைக் குழாயில் மின்மோட்டார் பழுதடைந்தது. அதைத் தொடர்ந்து ஒரிரு மாதங்களில் ஒருநாள் இரவில், குடிநீர் தொட்டியும் மாயமானது.

இதனால், மற்ற இரு இடங்களில் உள்ள குடிநீர் தொட்டிநீரை இப்பகுதியினர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் வீட்டு குழாய் இணைப்பு குழாயில், இரு மாதத்திற்கு மேலாக சரியாக குடிநீர் வருவதில்லை.

இதனால், இரு குடிநீர் தொட்டியில் மட்டும் வீட்டிற்கு தேவையான தண்ணீரை பிடித்து வந்தனர். இந்நிலையில் இரு குடிநீர் தொட்டியின் மின் மோட்டாரும் பழுதடைந்துவிட்டது. ஊராட்சி நிர்வாகம் மின்மோட்டாரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால், குடிநீருக்காக திண்டாடி வருகிறோம். காலிக் குடங்களுடன் பிற பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய நிலை உள்ளது என, கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே, பழுதடைந்த நிலையில் உள்ள மூன்று 'மினிடேங்க்கு'களையும் சீரமைக்க வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மேல்ஒட்டிவாக்கம் காலனியினர் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us