sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

குடிநீர் நீர்த்தேக்க கிணறு பயன்பாட்டுக்கு திறப்பு

/

குடிநீர் நீர்த்தேக்க கிணறு பயன்பாட்டுக்கு திறப்பு

குடிநீர் நீர்த்தேக்க கிணறு பயன்பாட்டுக்கு திறப்பு

குடிநீர் நீர்த்தேக்க கிணறு பயன்பாட்டுக்கு திறப்பு


ADDED : மே 11, 2025 12:40 AM

Google News

ADDED : மே 11, 2025 12:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், மருத்துவன்பாடி ஊராட்சியில், அருந்ததிபாளையம், மேல் சித்தமல்லி, நாகமேடு, கொருக்கந்தாங்கல் உள்ளிட்ட துணை கிராமங்கள் உள்ளன. இங்கு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, சிறுமின்விசை குழாய்கள் ஆகியவற்றின் வாயிலாக, குடியிருப்புகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து, 9 கி.மீ., தூரத்தில் குழாய் வாயிலாகவும் குடிநீர் கொண்டு வரப்படுகிறது. அவ்வாறு கொண்டுவரும்போது அடிக்கடி குழாய் உடைந்து குடிநீர் வினியோகம் தடைப்பட்டு வந்தது.

இதை தவிர்க்க, குடிநீர் நீர்த்தேக்க கிணறு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, 2024 --- 25ம் நிதி ஆண்டில், ஒன்றிய பொது நிதியில் இருந்து, 1 கோடி செலவில், குடிநீர் நீர்த்தேக்க கிணறு, மேல்நிலை குடிநீர் நீர்த்தேக்க தொட்டி மற்றும் குழாய் ஆகியவை அமைக்கப்பட்டது.

இதை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நிகழ்ச்சி மருத்துவன்பாடி ஊராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நேற்று நடந்தது.

உத்திரமேரூர் தி.மு.க., -- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று குடிநீர் நீர்த்தேக்க கிணற்றை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இதில், காஞ்சிபுரம் தி.மு.க., -- எம்.பி., செல்வம், ஒன்றிய தி.மு.க., செயலர் ஞானசேகரன், உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us