sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வார்டுகளில் வளர்ச்சி பணிகளை ஒதுக்க எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் போராட்டம்

/

வார்டுகளில் வளர்ச்சி பணிகளை ஒதுக்க எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் போராட்டம்

வார்டுகளில் வளர்ச்சி பணிகளை ஒதுக்க எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் போராட்டம்

வார்டுகளில் வளர்ச்சி பணிகளை ஒதுக்க எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் போராட்டம்


ADDED : பிப் 06, 2024 04:45 AM

Google News

ADDED : பிப் 06, 2024 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் மாநகராட்சியில், அ.தி.மு.க., - சுயேட்சை கவுன்சிலர்கள் செயல்படும் வார்டுகளில், வளர்ச்சி பணிகளுக்கு, மேயர், கமிஷனர் ஆகியோர் முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நீண்ட நாட்களாகவே எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.

ஒவ்வொரு மாநகராட்சி கூட்டத்திலும் இப்பிரச்னைகள் பற்றி எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் பேசி வாக்குவாதம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி அலுவலகத்தின் நுழைவாயிலில் அமர்ந்து, அ.தி.மு.க., - பா.ம.க., - சுயேட்சை - பா.ஜ.,வைச்சேர்ந்த கவுன்சிலர்கள் சிந்தன், புனிதா, சாந்தி, சரஸ்வதி, மவுலி, சூர்யா, விஜிதா உள்ளிட்டோர் காலை முதல் இரவு வரை போராட்டம் நடத்தினர்.

மாநகராட்சி வாசலிலேயே, கவுன்சிலர்கள் மதிய உணவு சாப்பிட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'தங்களது வார்டுகளில் வளர்ச்சி பணிகள் செய்ய வேண்டும்; பொதுக்கழிப்பறைகளை ஏலம் விட வேண்டும்; மாநகராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையே, மாநகராட்சி பொறியாளர் கணேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கவுன்சிலர்களிடம் பேச்சு நடத்தினர்.






      Dinamalar
      Follow us