/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
நெல் கொள்முதல் நிலையங்கள் 13 இடங்களில் திறப்பு
/
நெல் கொள்முதல் நிலையங்கள் 13 இடங்களில் திறப்பு
ADDED : மார் 23, 2025 10:44 PM
உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், மருத்துவன்பாடி, கருவேப்பம்பூண்டி, ஆனைபள்ளம், நாஞ்சிபுரம், காவனுார் புதுச்சேரி, மேனலுார், அத்தியூர் மேல்துாளி, அகரம் துாளி, கம்மாளம்பூண்டி ஆகிய 9 கிராமங்களில், நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
உத்திரமேரூர் தி.மு.க., --- எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார். இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம் தாலுகாவில், புதுப்பாக்கம், கோவிந்தவாடி, கம்மவார்பாளையம், கொட்டவாக்கம் ஆகிய நான்கு கிராமங்களில், நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு, வாலாஜாபாத் தி.மு.க.,- ஒன்றியக் குழு சேர்மன் தேவேந்திரன் தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., எழிலரசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார்.
வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய தி.மு.க.,வினர் மற்றும் நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.