sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மே மாதத்திற்கான சம்பளம் வழங்காததால் ஊராட்சி செயலர்கள், துாய்மை காவலர்கள் அவதி

/

மே மாதத்திற்கான சம்பளம் வழங்காததால் ஊராட்சி செயலர்கள், துாய்மை காவலர்கள் அவதி

மே மாதத்திற்கான சம்பளம் வழங்காததால் ஊராட்சி செயலர்கள், துாய்மை காவலர்கள் அவதி

மே மாதத்திற்கான சம்பளம் வழங்காததால் ஊராட்சி செயலர்கள், துாய்மை காவலர்கள் அவதி


ADDED : ஜூன் 12, 2025 11:29 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், மே மாதத்திற்கான சம்பளம் வழங்காததால், ஊராட்சி செயலர்கள், துாய்மை காவலர்கள், பணியாளர்கள் அவதிப்படுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், குன்றத்துார், உத்திரமேரூர் என, ஐந்து ஒன்றியங்களிலும் 274 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சியில் குடிநீர், தெருவிளக்கு, சாலை பராமரிப்பு, ஊராட்சி பதிவேடு பராமரித்தல் உள்ளிட்ட பல பணியை மேற்கொள்ள, ஊராட்சி தலைவருக்கு உதவியாக, ஊராட்சி செயலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஊராட்சி செயலர்களுக்கு, தமிழ்நாடு ஊராட்சிகள் எளிமைப்படுத்தப்பட்ட கணக்குகள் இணையதளத்தின் வாயிலாக, மாதந்தோறும் முறையாக சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த மே மாதத்திற்கான சம்பளத்தை, ஜூன் மாதத்தின் இன்றைய தேதி வரை, ஊராட்சியின் ஊதிய கணக்கிற்கு பணம் விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனால், பொருளாதார ரீதியிலும், மன ரீதியிலும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து ஊராட்சி செயலர்கள் சிலர் கூறியதாவது:

மே மாதத்திற்கான சம்பளம் வழங்காததால், குடும்பம் நடத்த முடியாத சூழல் உள்ளது. தற்போது பள்ளி, கல்லுாரிகள் திறந்துள்ள நிலையில், எங்களின் பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளது.

வட்டிக்கு பணம் வாங்கி குடும்பம் நடத்த வேண்டிய நிலை உள்ளது. எனவே, மே மாதத்திற்கான சம்பளத்தை உடனே வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

துாய்மை பணியாளர்கள்


காஞ்சிபுரம் மாவட்டத்தில் 274 ஊராட்சிகளிலும், தலா 4 துாய்மை காவலர், தலா 1 ஊராட்சி துாய்மை பணியாளர் என, மாவட்டம் முழுதும் 1,370க்கும் மேற்பட்டோர் துாய்மை பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஊராட்சி செயலர்களைப்போல, துாய்மை காவலர்களுக்கும், துாய்மை பணியாளர்களுக்கும் மே மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கவில்லை.

இதனால், குறைந்த சம்பளம் பெறும் துாய்மை காவலர் மற்றும் துாய்மை பணியாளர்களும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாநில நிதிக் குழு மானியம் வராததால், ஊதிய கணக்கில் பணம் வரவு வைக்க முடியவில்லை. வந்தவுடன், உடனே பணம் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us