sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பாதாள சாக்கடையில் அடைப்பு பஞ்சுகொட்டி தெருவினர் பரிதவிப்பு

/

பாதாள சாக்கடையில் அடைப்பு பஞ்சுகொட்டி தெருவினர் பரிதவிப்பு

பாதாள சாக்கடையில் அடைப்பு பஞ்சுகொட்டி தெருவினர் பரிதவிப்பு

பாதாள சாக்கடையில் அடைப்பு பஞ்சுகொட்டி தெருவினர் பரிதவிப்பு


ADDED : ஜன 11, 2024 09:59 PM

Google News

ADDED : ஜன 11, 2024 09:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுகொட்டி தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகளும், உணவகம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், வீடுகளில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில் இருந்து கழிவு நீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது.

இதனால், இங்கு வசிப்போர் இரு நாட்களாக குளிக்காமலும், இயற்கை உபாதை கழிக்க பொது கழிப்பறைக்கு செல்ல வேண்டிய பரிதாப நிலை உள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:

பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக வீட்டில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையில் உள்ள கழிவு நீர் வெளியேறாமல் தேங்கியுள்ளது.

இதனால், வீட்டில் உள்ள கழிப்பறை மற்றும் குளியல் அறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும், பாதாள சாக்கடையில் உள்ள கழிவு நீர் வீட்டிற்குள் ரிட்டர்ன் ஆவதால், துர்நாற்றம் வீசுகிறது.

வீட்டில் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது.

எனவே, பஞ்சுகொட்டி தெருவில் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us