sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பரந்துார் ஏர்போர்ட் :அதிகாரிகளை முற்றுகையிட்ட நெல்வாய் கிராமத்தினர்

/

பரந்துார் ஏர்போர்ட் :அதிகாரிகளை முற்றுகையிட்ட நெல்வாய் கிராமத்தினர்

பரந்துார் ஏர்போர்ட் :அதிகாரிகளை முற்றுகையிட்ட நெல்வாய் கிராமத்தினர்

பரந்துார் ஏர்போர்ட் :அதிகாரிகளை முற்றுகையிட்ட நெல்வாய் கிராமத்தினர்


ADDED : நவ 05, 2024 10:24 PM

Google News

ADDED : நவ 05, 2024 10:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:சென்னையின் இரண்டாவது விமான நிலையம், காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துாரில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு, பரந்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 5,400 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில், தனியார் வசமிருக்கும், 3,750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளன. மீதி நிலம் அரசு நிலமாகும்.

தனியாரிடம் உள்ள நிலம் எடுக்கும் பணிக்கு, அரசு ஒவ்வொரு கிராமமாக அறிவிப்பை வெளியிட்டு, நிலம் கையகப்படுத்தி வருகிறது. பரந்துார் ஊராட்சி, நாகப்பட்டு கிராமத்திற்கு, கடந்த மாதம் நிலம் அளவீடு செய்ய வருவாய் துறையினரை கிராம பெண்கள் முற்றுகையிட்டனர்.

அதை தொடர்ந்து, நேற்று, தண்டலம் ஊராட்சியைச் சேர்ந்த நெல்வாய் துணை கிராமத்தில், வருவாய் துறையினர் நிலம் அளக்க சென்றனர்.

அப்போது, நெல்வாய் கிராமத்தினர், வருவாய் துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர். காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் சமரசத்திற்கு பின், நெல்வாய் கிராமத்தினர் புறப்பட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us