sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கழிப்பறை வசதியுடன் பயணியர் நிழற்குடை

/

கழிப்பறை வசதியுடன் பயணியர் நிழற்குடை

கழிப்பறை வசதியுடன் பயணியர் நிழற்குடை

கழிப்பறை வசதியுடன் பயணியர் நிழற்குடை


ADDED : செப் 08, 2025 12:34 AM

Google News

ADDED : செப் 08, 2025 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், புதிய நிழற்குடை கட்டமைப்பில் கூடுதலாக கழிப்பறை வசதி கட்டப்பட்டு வருகிறது.

சென்னை - கன்னியாகுமரி தொழிற்தடம் திட்டம் சார்பில், காஞ்சிபுரம் - செங்கல்பட்டு நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்தல் உள்ளிட்ட பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெறுகின்றன.

ஏற்கனவே 21 அடி அகலம் உடைய இச்சாலை, தற்போது 50 அடியாக அகலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 2022ல் துவங்கி 39 கி.மீ., துாரத்திற்கான சாலை அகலப்படுத்துதல் மற்றும் புதிய பாலங்கள் அமைத்தல், மழைநீர் வடிகால்வாய் வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இப்பணிகள் மேற்கொண்ட போது, சாலை விரிவாக்கம் செய்ய பேருந்து நிறுத்தங்களில், சாலையோரங்களில் இருந்த பயணியர் நிற்குடை கட்டடங்கள் அகற்றப்பட்டன.

தற்போது பணி நிறைவு பெற்ற இடங்களில், அகற்றப்பட்ட நிழற்குடை கட்டடங்களுக்கு மாறாக புதிய பயணியர் நிழற்குடை கட்டடங்கள் ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகின்றன.

இதில், பழையசீவரம் உள்ளிட்ட இடங்களில், அதிக அளவிலான பயணியர் வருகை தரும் முக்கிய பேருந்து நிறுத்தங்களில் கழிப்பறை வசதியுடன்கூடிய நிழற்குடை கட்டப்பட்டு வருகிறது.






      Dinamalar
      Follow us