sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நடைபாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற பாதசாரிகள் வலியுறுத்தல்

/

நடைபாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற பாதசாரிகள் வலியுறுத்தல்

நடைபாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற பாதசாரிகள் வலியுறுத்தல்

நடைபாதையில் ஆக்கிரமிப்பு அகற்ற பாதசாரிகள் வலியுறுத்தல்


ADDED : அக் 04, 2025 01:12 AM

Google News

ADDED : அக் 04, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓரிக்கை:காஞ்சிபுரம் மிலிட்டரி சாலையோர நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகரில் இருந்து, செவிலிமேடு மும்முனை சாலை சந்திப்பு வரையுள்ள ஓரிக்கை மிலிட்டரி சாலை 7 கி.மீ., நீளமும், 5.5 மீட்டர் அகலமும் கொண்டது.

கனரக வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், சென்னை - கன்னியாகுமரி சாலை திட்டத்தின் கீழ், 11 மீட்டர் அகலத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு, சாலையோரம் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மிலிட்டரி சாலையோரம் உள்ள வீட்டினர் நடைபாதையை ஆக்கிரமித்து, பூந்தொட்டியில் செடிகள் வைத்துள்ளனர். மேலும், கடைக்காரர்களும் தங்களது கடைகளை, நடைபாதையை ஆக்கிரமித்து விரிவாக்கம் செய்துள்ளனர்.

இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளதால், கனரக வாகன போக்குவரத்து நிறைந்த சாலையில் நடந்து செல்லும்போது விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.

எனவே, மிலிட்டரி சாலையோரம் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதசாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us