sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

3 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் உத்திரமேரூர் மக்கள் அவதி

/

3 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் உத்திரமேரூர் மக்கள் அவதி

3 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் உத்திரமேரூர் மக்கள் அவதி

3 நாட்களாக குடிநீர் கிடைக்காமல் உத்திரமேரூர் மக்கள் அவதி


ADDED : ஜூன் 12, 2025 01:35 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூரில் ராட்சத குழாய் உடைந்து மூன்று நாட்களாக குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளில் 40,000 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து, 15 கிலோ மீட்டர் துாரத்திற்கு ராட்சத குழாய் வாயிலாக குடிநீர் கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், மூன்று நாட்களுக்கு முன் இந்த ராட்சத குழாய் மணல்மேடு, திருப்புலிவனம் ஆகிய பகுதிகளில் உடைந்து குடிநீர் வினியோகம் செய்வது தடைபட்டது.

இதனால், உத்திரமேரூர் பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள், மூன்று நாட்களாக தவித்து வருகின்றனர். தற்போது, உடைந்த குடிநீர் குழாயை சரிசெய்யும் பணியில் பேரூராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் கூறியதாவது:

உத்திரமேரூர் பேரூராட்சிக்கு வெங்கச்சேரி செய்யாற்றில் இருந்து குடிநீர் கொண்டு வரப்படும் ராட்சத குழாய் இரண்டு இடத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

தற்போது, அதை சரி செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அதற்கான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு குடிநீர் மீண்டும் தடையின்றி வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us