sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

'மக்களுடன் முதல்வர்' திட்டம் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல்

/

'மக்களுடன் முதல்வர்' திட்டம் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல்

'மக்களுடன் முதல்வர்' திட்டம் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல்

'மக்களுடன் முதல்வர்' திட்டம் வீடு வீடாக துண்டு பிரசுரம் வழங்கல்


ADDED : ஜன 04, 2024 08:48 PM

Google News

ADDED : ஜன 04, 2024 08:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தமிழக அரசின், 'மக்களுடன் முதல்வர்' என்ற சிறப்பு திட்டத்தின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகர்ப்புறத்தை சுற்றியுள்ள ஊராட்சிகளில் பொதுமக்களிடம் மனுக்கள் பெற்று தீர்வு காணும் முகாம் நேற்று முன்தினம் துவங்கியது.

மாவட்டம் முழுதும் வரும் 30ம் தேதி வரை இம்முகாம் நடக்கிறது. இதில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட நான்கு மண்டலங்களிலும் இம்முகாம் எட்டு இடங்களில் நடக்கிறது.

முகாம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஆட்டோவில் ஒலிப்பெருக்கி வாயிலாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி கொசு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று 'மக்களுடன் முதல்வர்' திட்டம் குறித்தும், இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சேவைகள், முகாம் எந்த இடத்தில் நடக்கிறது, முகாமிற்கு வருவோர் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் எவை என்பன உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய துண்டு பிரசுரத்தை வீடு வீடாக வழங்கி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us