sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கொளத்துார் ஊராட்சி கூட்டமைப்பு தலைவரை மாற்ற வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு

/

கொளத்துார் ஊராட்சி கூட்டமைப்பு தலைவரை மாற்ற வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு

கொளத்துார் ஊராட்சி கூட்டமைப்பு தலைவரை மாற்ற வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு

கொளத்துார் ஊராட்சி கூட்டமைப்பு தலைவரை மாற்ற வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு


ADDED : அக் 15, 2025 09:27 PM

Google News

ADDED : அக் 15, 2025 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சியில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், கொளத்துார் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு தலைவரை மாற்ற வேண்டி, ஸ்ரீபெரும்புதுார் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு வழங்கியுள்ளனர்.

மனு விபரம்:

ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், கொளத்துார் ஊராட்சிக்குட்பட்ட கொளத்துார், கே.கே.நகர், மேட்டுக்கொளத்துார், வெள்ளாரை, நவலுார் ஆகிய கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட சுயஉதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

இக்குழுக்களை உள்ளடக்கிய, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் தலைவராக சுதந்திர தேவி என்பவர், 17 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். அதேபோல, ஊராட்சி வறுமை ஒழிப்பு சங்கத்திற்கும் தலைவராக உள்ளார்.

இந்த இரண்டு அமைப்புகள் வாயிலாக, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வரும் சலுகைகள் மற்றும் தகவல்களை, குழுக்களுக்கு தெரிவிக்காமல், இவருக்கு வேண்டிய நபர்களை, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் செயலராக நியமித்து, வங்கி பண பரிவர்த்தனை மற்றும் வரவு - செலவுகளை மறைமுகமாக செயல்படுத்தி வருகிறார்.

மேலும், கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்ட கணினி மற்றும் மொபைல் போனை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தி வருகிறார். அதேபோல, வறுமை ஒழிப்பு சங்கத்திலும், இவருக்கு வேண்டிய நபர்களுக்கே பணம் வழங்குகிறார்.

எனவே, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் வறுமை ஒழிப்பு சங்கத் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கி, புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகணபதி கூறுகையில், ''இது குறித்து மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்கள்,'' என்றார்.






      Dinamalar
      Follow us