sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

 3 இடங்களில் குழாயில் உடைப்பு: செவிலிமேடில் வீணாகும் குடிநீர்

/

 3 இடங்களில் குழாயில் உடைப்பு: செவிலிமேடில் வீணாகும் குடிநீர்

 3 இடங்களில் குழாயில் உடைப்பு: செவிலிமேடில் வீணாகும் குடிநீர்

 3 இடங்களில் குழாயில் உடைப்பு: செவிலிமேடில் வீணாகும் குடிநீர்


ADDED : டிச 24, 2025 06:46 AM

Google News

ADDED : டிச 24, 2025 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செவிலிமேடு: காஞ்சிபுரம் செவிலிமேடு பிரதான சாலையில் நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாயில், மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு ஒரு வாரமாக குடிநீர் வீணாகி வருகிறது.

காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் வசிப்பவர்களுக்கு பாலாறு, திருப்பாற்கடல், வேகவதி ஆற்றங்கரையில் ஆழ்துளை குழாய் அமைக்கப்பட்டு, நிலத்தடியில் புதைக்கப்பட்ட குழாய் வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காஞ்சிபுரம் - -வந்தவாசி சாலை, செவிலிமேடு பிரதான சாலையில் மூன்று இடங்களில், நிலத்தடியில் புதைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக குடிநீர் வீணாக சாலையில் வெளியேறி வருகிறது.

இதனால், இப்பகுதியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதோடு, நீண்டநேரம் மின்மோட்டார் இயங்குவதால், மின்சாரம் விரயமாவதுடன், மின்மோட்டாரும் விரைவில் பழுதாகும் நிலை உள்ளது.

மேலும், தொடர்ந்து வெளியேறும் குடிநீரால் அப்பகுதியில், மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைகிறது.

எனவே, செவிலிமேடு பிரதான சாலையில், மூன்று இடங்களில் குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us