sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மானாம்பதி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு

/

மானாம்பதி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு

மானாம்பதி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு

மானாம்பதி ஊராட்சியில் மரக்கன்றுகள் நடவு


ADDED : ஜூலை 02, 2025 11:21 PM

Google News

ADDED : ஜூலை 02, 2025 11:21 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாம்பதி:மானாம்பதி ஊராட்சியில் தனியார் தொழிற்சாலை பங்களிப்புடன் 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன.

உத்திரமேரூர் ஒன்றியம், மானாம்பதி கிராமத்தில் 4,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள பிரதான சாலையோரங்களிலும், அரசு புறம்போக்கு இடங்களிலும் பழம் மற்றும் நிழல் தரக்கூடிய மரக்கன்றுகளை நட ஊராட்சி நிர்வாகம் தீர்மானித்தது.

அதன்படி, வந்தவாசி செல்லும் சாலையோரத்தில் மானாம்பதி ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில், இண்டோகூல் காம்போசைட் தனியார் தொழிற்சாலை பங்களிப்பில், பழம் மற்றும் நிழல் தரக்கூடிய மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மானாம்பதி ஊராட்சி தலைவர் ராதா தலைமை வகித்தார். இண்டோகூல் காம்போசைட் தொழிற்சாலை நிர்வாக இயக்குநர் ராமசந்திரன், ஊராட்சி துணைத்தலைவர் தரணி பிரகாஷ் முன்னிலை வகித்தனர்.

அதில், பழம் மற்றும் நிழல் தரக்கூடிய 1,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இதில், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us