/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
விச்சந்தாங்கல் தோட்டக்கலை பண்ணையில் விற்பனைக்கு தயார் நிலையில் செடிகள்
/
விச்சந்தாங்கல் தோட்டக்கலை பண்ணையில் விற்பனைக்கு தயார் நிலையில் செடிகள்
விச்சந்தாங்கல் தோட்டக்கலை பண்ணையில் விற்பனைக்கு தயார் நிலையில் செடிகள்
விச்சந்தாங்கல் தோட்டக்கலை பண்ணையில் விற்பனைக்கு தயார் நிலையில் செடிகள்
ADDED : நவ 20, 2024 12:57 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, விச்சந்தாங்கலில், அரசு தோட்டக்கலை பண்ணை இயங்கி வருகிறது. இங்கு பழச்செடிகள், அழகிய மலர் செடிகள், சாலையோர மரச்செடிகள், மூலிகை செடிகள், வாசனை திரவிய செடிகள் என, பல்வேறு வகையான செடிகள் குறைந்த விலையில் விற்பனைக்கு தயாராக உள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது பெய்து வரும் மழையால், பூமியில் உள்ள ஈரப்பதம் காரணமாக மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு ஏதுவான தருணமாக உள்ளது.
எனவே, இங்குள்ள பல்வேறு வகையான செடிகளை பொதுமக்கள் குறைந்த விலையில் வாங்கிச் சென்று பயனடைலாம் என, விச்சந்தாங்கல் தோட்டக்கலை அலுவலர் சவுமியா, உதவி தோட்டக்கலை அலுவலர் தனஞ்செயன் ஆகியோர் தெரிவித்தனர்.