/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மணிமங்கலம் சாலை மீடியனில் தண்ணீரின்றி வாடும் செடிகள்
/
மணிமங்கலம் சாலை மீடியனில் தண்ணீரின்றி வாடும் செடிகள்
மணிமங்கலம் சாலை மீடியனில் தண்ணீரின்றி வாடும் செடிகள்
மணிமங்கலம் சாலை மீடியனில் தண்ணீரின்றி வாடும் செடிகள்
ADDED : ஏப் 11, 2025 01:15 AM

ஸ்ரீபெரும்புதுார்::ஸ்ரீபெரும்புதுார்- -- மணிமங்கலம் சாலையில், நெடுஞ்சாலைத் துறையினரால் மீடியனில் வைக்கப்பட்ட செடிகள், பராமரிப்பு இல்லாததால், தண்ணீர் இன்றி வாடி வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் -- மணிமங்கலம் சாலையானது, சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் அருகே, பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பூங்கா இந்த சாலையை ஒட்டி இருப்பதால், நாள்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.
குறுகிய சாலையால் நெரிசலும், அடிக்கடி விபத்தும் நடந்ததால், இச்சாலையை இருவழியில் இருந்து, நான்குவழி சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு, ஸ்ரீபெரும்புதுார் முதல், மணிமங்கலம் வரை, விரிவாக்கம் செய்யப்பட்டது.
இதையடுத்து, வாகனங்களில் கரும்புகை, மண் துகள் அடங்கிய துாசிகளால் ஏற்படும் பாதிப்பினை குறைக்க, சாலை நடுவே, அரளி செடிகளை நெடுஞ்சாலைத் துறையினர் வைத்தனர்.
இந்த நிலையில், தற்போது, தமிழகத்தில் வெயில் அதிகரித்து உள்ள நிலையில், சாலை நடுவே வைக்கப்படட்ட செடிகள் பராமரிப்பு இல்லாமல், தண்ணீரின்றி காய்ந்து வருகின்றன.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினர், தினமும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

