/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் பிளாஸ்டிக் குவியல் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
கால்வாயில் பிளாஸ்டிக் குவியல் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் பிளாஸ்டிக் குவியல் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் பிளாஸ்டிக் குவியல் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : ஜூன் 04, 2025 02:02 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக சென்று நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.
இக்கால்வாயின் இருபுறமும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையின் காரணமாக கால்வாயில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக்  பாட்டில் உள்ளிட்ட குப்பை குவியல், காமராஜர் வீதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறுபாலத்தின் நீர்வழித்தடத்தில், குவியலாக உள்ளது.
இதனால், கால்வாய் வாயிலாக மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உள்ளது.
எனவே, மஞ்சள் நீர் கால்வாய் சிறுபாலத்தில் குவிந்துள்ள பிளாஸ்டிக் பாட்டில் உள்ள கழிவு பொருட்களை அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

