sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

காஞ்சியில் வரும் 20ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

/

காஞ்சியில் வரும் 20ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

காஞ்சியில் வரும் 20ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

காஞ்சியில் வரும் 20ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை


ADDED : மே 15, 2025 08:33 PM

Google News

ADDED : மே 15, 2025 08:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை, 1வது வார்டில் உள்ள அனைத்து கடைகளிலும், பிளாஸ்டிக் பயன்படுத்துவததை தவிர்த்தல் மற்றும் தமிழில் பெயர் பலகை அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி நகர் நல அலுவலர் அருள் நம்பி, மாநகராட்சி துப்புரவு அலுவலர் சுகவனம், ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர், பலசரக்கு மளிகை, டீ கடை, உணவகம் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும், நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், அனைத்து கடைகளிலும், தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். மாநகராட்சியில் கடை உரிமம் பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினர். வரும் 20ம் தேதி முதல் அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என, வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், ஒலிமுகமதுபேட்டை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலர் சேகர், பொருளாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், பலசரக்கு மளிகை கடை, டீ கடை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், ஒலிமுகமதுபேட்டை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலர் சேக, பொருளாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், பலசரக்கு மளிகை கடை, டீ கடை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு உரிமையாளர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us