/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சியில் வரும் 20ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
/
காஞ்சியில் வரும் 20ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
காஞ்சியில் வரும் 20ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
காஞ்சியில் வரும் 20ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை
ADDED : மே 15, 2025 08:33 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை, 1வது வார்டில் உள்ள அனைத்து கடைகளிலும், பிளாஸ்டிக் பயன்படுத்துவததை தவிர்த்தல் மற்றும் தமிழில் பெயர் பலகை அமைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், காஞ்சிபுரம் மாநகராட்சி நகர் நல அலுவலர் அருள் நம்பி, மாநகராட்சி துப்புரவு அலுவலர் சுகவனம், ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர், பலசரக்கு மளிகை, டீ கடை, உணவகம் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும், நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், அனைத்து கடைகளிலும், தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். மாநகராட்சியில் கடை உரிமம் பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினர். வரும் 20ம் தேதி முதல் அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என, வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில், ஒலிமுகமதுபேட்டை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலர் சேகர், பொருளாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், பலசரக்கு மளிகை கடை, டீ கடை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், ஒலிமுகமதுபேட்டை அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் பன்னீர்செல்வம், செயலர் சேக, பொருளாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள், பலசரக்கு மளிகை கடை, டீ கடை, உணவகம் உள்ளிட்ட பல்வேறு உரிமையாளர்கள் பங்கேற்றனர்.