/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
வடிகால்வாயில் பிளாஸ்டிக் குப்பையால் சீர்கேடு
/
வடிகால்வாயில் பிளாஸ்டிக் குப்பையால் சீர்கேடு
ADDED : மே 16, 2025 02:27 AM

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சந்தவேலுார் ஊராட்சிக்குட்பட்ட வேளாங்கண்ணி நகரில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்த வெளியேறும் பிளாஸ்டிக் குப்பையை, வேளாங்கண்ணி நகரில் உள்ள சாலையோரம் வடிகால்வாயில் அப்பகுதியினர் வீசி செல்கின்றனர்.
வடிகால்வாய் முழுதும் குப்பை நிரம்பி உள்ளதால், வீடுளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் முழுமையாக வெளியேறாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து அப்பகுதியினர் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே, கால்வாயில் குவிந்துள்ள குப்பையை அகற்றி, சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.