sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வானசுந்தரேஸ்வரர் குளத்தில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவு

/

வானசுந்தரேஸ்வரர் குளத்தில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவு

வானசுந்தரேஸ்வரர் குளத்தில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவு

வானசுந்தரேஸ்வரர் குளத்தில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவு


ADDED : ஏப் 13, 2025 01:48 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் தாலுகா, மானாம்பதி கிராமத்தில், பெரியநாயகி சமேத வானசுந்தரேஸ்வரர் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது.

இங்கு, சிவராத்திரி, மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இந்நிலையில், இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவில் குளத்தில் நீராடி, இறைவனை வழிபடுவது வழக்கம்.

தற்போது, கோவில் குளம் முறையாக பராமரிப்பு இல்லாமல், குளத்தின் கரைகளில் செடி, கொடிகள் வளர்ந்து உள்ளன. குளத்தின் அருகே குப்பை தொட்டி இல்லாமல் உள்ளது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் கழிவை குளத்தில் வீசி செல்கின்றனர். இதனால், குளத்தின் நீர் மாசடைந்து உள்ளது.

எனவே, கோவில் குளத்தில் உள்ள பிளாஸ்டிக் கழிவை அகற்றி, அதை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us