/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : பிப் 12, 2026 05:41 AM

காஞ்சிபுரம் மஞ்சள் நீர் கால்வாய், கைலாசநாதர் கோவில் அருகே உள்ள புத்தேரி பகுதியில் துவங்கி, கிருஷ்ணன் தெரு, பல்லவர்மேடு, காமராஜர் வீதி, ரயில்வே சாலை, ஆனந்தாபேட்டை, திருக்காலிமேடு வழியாக சென்று நத்தப்பேட்டை ஏரியில் இணைகிறது.
இந்நிலையில், கால்வாயில் அடித்து வரப்பட்ட பாலித்தீன் கவர், பிளாஸ்டிக் பாட்டில் உள்ளிட்ட குப்பை கழிவுகள், திருக்காலிமேடில் சிறுபாலத்தின் அருகில் குவியலாக உள்ளதால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கால்வாய் மூலம் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழும் நிலை உள்ளது.
எனவே, திருக்காலிமேடில், மஞ்சள் நீர் கால்வாய் சிறுபாலத்தின் நீர்வழித்தடத்தில் குவியலாக உளள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தி.மோகன், காஞ்சிபுரம்.

