sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

உத்திரமேரூரில் தொடர் திருட்டுகள் 'சிசிடிவி'க்களை சரிசெய்த போலீசார்

/

உத்திரமேரூரில் தொடர் திருட்டுகள் 'சிசிடிவி'க்களை சரிசெய்த போலீசார்

உத்திரமேரூரில் தொடர் திருட்டுகள் 'சிசிடிவி'க்களை சரிசெய்த போலீசார்

உத்திரமேரூரில் தொடர் திருட்டுகள் 'சிசிடிவி'க்களை சரிசெய்த போலீசார்


ADDED : ஜன 13, 2025 12:50 AM

Google News

ADDED : ஜன 13, 2025 12:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், தாலுகா அலுவலகம், பி.டி.ஓ., அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து, தினமும் 5,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

அதனால், காஞ்சிபுரம் சாலை, பெண்கள் மேல்நிலை பள்ளி, எண்டத்துார் சாலை, பேருந்து நிலையம், வந்தவாசி சாலை ஆகிய இடங்களில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

இதை பயன்படுத்தி, பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடந்து வந்ததால், அதை தடுக்க போலீசார் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

கடந்த ஓராண்டாக, கண்காணிப்பு கேமராக்கள் பராமரிப்பு இன்றி பழுதடைந்து இருந்தன. அதனால், அதை பயன்படுத்தி, பேரூராட்சியின் பல்வேறு இடங்களில், திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன.

இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், நேற்று பேரூராட்சியின் முக்கிய இடங்களில், பழுதடைந்து இருந்த கண்காணிப்பு கேமராக்களை சரிசெய்யும் பணியில், உத்திரமேரூர் போலீசார் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us