sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

இருளில் மூழ்கி கிடக்கும் பொன்னேரிக்கரை சந்திப்பு சாலை

/

இருளில் மூழ்கி கிடக்கும் பொன்னேரிக்கரை சந்திப்பு சாலை

இருளில் மூழ்கி கிடக்கும் பொன்னேரிக்கரை சந்திப்பு சாலை

இருளில் மூழ்கி கிடக்கும் பொன்னேரிக்கரை சந்திப்பு சாலை


ADDED : ஜூலை 06, 2025 01:06 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:பொன்னேரிக்கரை கூட்டு சாலையில், உயர்கோபுர மின்விளக்குகள் எரியாததால், பேருந்திற்கு காத்திருப்போர் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பொன்னேரிக்கரை சந்திப்பு சாலை உள்ளது. இங்கு, காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பு மையமும் செயல்பட்டு வருகிறது.

இந்த சாலை வழியாக, சென்னையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் பேருந்து மற்றும் பிற வாகனங்கள், காஞ்சிபுரத்தில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதி செல்லும் பேருந்து மற்றும் பிற வாகனங்கள் செல்கின்றன.

இந்த பொன்னேரிக்கரை சந்திப்பு சாலையில், இரண்டு உயர்கோபுர மின்விளக்குகள் உள்ளன. இந்த விளக்குகள் மழை பெய்தால் எரிவதில்லை.

இதனால், பொன்னேரிக்கரை சந்திப்பு சாலை இருளில் மூழ்கும் சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக, தொழிற்சாலை பேருந்துகள் மற்றும் பிற வழித்தடங்களில் இருந்து, மாற்று பேருந்துகளுக்கு காத்திருக்கும் பயணியர், இருளில் அச்சத்துடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம், உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us