sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

மருத்துவமனையில் பிரின்டர் பழுது ஓ.பி., சீட்டு வழங்குவதில் தாமதம்

/

மருத்துவமனையில் பிரின்டர் பழுது ஓ.பி., சீட்டு வழங்குவதில் தாமதம்

மருத்துவமனையில் பிரின்டர் பழுது ஓ.பி., சீட்டு வழங்குவதில் தாமதம்

மருத்துவமனையில் பிரின்டர் பழுது ஓ.பி., சீட்டு வழங்குவதில் தாமதம்


ADDED : ஜூன் 06, 2025 02:11 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு காஞ்சிபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மருத்துவ சிகிச்சைக்காக தினமும், 2,000க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

மருத்துமனைக்கு சிகிச்சைக்கு வருவோருக்கு ஓ.பி., சீட்டு எனப்படும் புறநோயாளி அனுமதி சீட்டு கணினியுடன் இணைக்கப்பட்ட பிரின்டர் வாயிலாக வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஒரு வாரமாக பிரின்டர் பழுதடைந்ததுள்ளதால், புறநோயாளி அனுமதி சீட்டை, மருத்துவமனை ஊழியர்கள், கைகளால் எழுதி கொடுப்பதால், காலதாமதம் ஏற்படுகிறது.

இதனால் நோயாளிகளும் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் புறநோயாளி சீட்டு வழங்கும் பிரிவில் உள்ள பழுதடைந்த நிலையில் பிரின்டரை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஓ.பி.சீட்டு வழங்கும் மிடத்தில், பழுதடைந்த பிரின்டரை சீரமைக்க ஏற்கனவே டெக்னீஷியனிடம் தெரிவித்துள்ளோம்.

பிரின்டர் சரி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us