/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
செடிகள் வளர்ந்து துார்ந்த கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
/
செடிகள் வளர்ந்து துார்ந்த கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
செடிகள் வளர்ந்து துார்ந்த கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
செடிகள் வளர்ந்து துார்ந்த கால்வாய் மழைநீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : அக் 07, 2025 01:47 AM

சதாவரம், சின்ன காஞ்சிபுரம், சதாவரம் பகுதியில், செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
சின்ன காஞ்சிபுரம் சதாவரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்யும் மழைநீர், வேகவதி ஆற்றுக்கு செல்லும் வகையில், வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயை முறையாக பராமரிக்காததால், கால்வாயின் நீர்வழித்தடம், மண் திட்டுகளாலும், செடி, கொடிகள் வளர்ந்துள்ளதாலும் கால்வாய் துார்ந்த நிலையில் உள்ளது.
இதனால், காஞ்சிபுரத்தில் பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள வீடுகளை சூழும் நிலை ஏற்பட்டுஉள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்குவதற்குள், சதாவரத்தில் உள்ள மழைநீர் வடிகால்வாயை துார்வாரி சீரமைக்க, மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.