/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
கால்வாயில் வளர்ந்த புற்களால் நீர் வெளியேறுவதில் சிக்கல்
/
கால்வாயில் வளர்ந்த புற்களால் நீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் வளர்ந்த புற்களால் நீர் வெளியேறுவதில் சிக்கல்
கால்வாயில் வளர்ந்த புற்களால் நீர் வெளியேறுவதில் சிக்கல்
ADDED : அக் 13, 2025 12:45 AM

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் டெம்பிள் சிட்டி, சுந்தர விநாயகர் நகரில், கான்கிரீட் வடிகால்வாயில் புல் வளர்ந்துள்ளதால், மழைநீர் வெளியேறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 48வது வார்டு, டெம்பிள் சிட்டி, சுந்தர விநாயகர் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் பெய்யும் மழைநீர் வெளியேறும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கான்கிரீட் வடிகால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இதில், சுந்தர விநாயகர் நகர் சிறுபாலம் அருகில், கான்கிரீட் கால்வாயின் நீர்வழித் தடத்தில் புல் வளர்ந்துள்ளது. பலத்த மழை பெய்தால், கால்வாய் வாயிலாக வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது.
எனவே, வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், டெம்பிள் சிட்டி, சுந்தர விநாயகர் நகரில், புல் வளர்ந்துள்ள கான்கிரீட் கால்வாயை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.