sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு 'காப்பு'

/

கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு 'காப்பு'

கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு 'காப்பு'

கஞ்சா வைத்திருந்த வாலிபருக்கு 'காப்பு'


ADDED : அக் 08, 2025 03:32 AM

Google News

ADDED : அக் 08, 2025 03:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்றத்துார்:குன்றத்துார் கரைமா நகரில் ரோந்து பணியில் இருந்த குன்றத்துார் போலீசார், தங்களை கண்டதும் பயந்து தப்பியோட முயன்ற பிரதாப், 23, என்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவரை சோதனை செய்தபோது, ஒரு கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், பிரதாப்பை கைது செய்து விசாரிக்கின்றனர்.

2 கிராம் நகை திருடியவர் கைது குன்றத்துார்: சோமங்கலம் அடுத்த நடுவீரப்பட்டு எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்தவர் ஜெயந்தி, 53. தி.நகரில் உள்ள ஆடை விற்பனையகத்தில் பணியாற்றும் இவர், கடந்த மாதம் 21ம் தேதி, இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 2 கிராம் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

சோமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, நகையை திருடிய, நடுவீரப்பட்டு ராம்ஜி நகரை சேர்ந்த கார்த்திக், 34, என்பவரை கைது செய்து, 2 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செம்பாக்கம்: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை கண்டித்து, அனைத்து வட்டார ஐக்கிய ஜமாத் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், சேலையூரை அடுத்த காமராஜபுரத்தில், நேற்று மாலை பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில், ம.ம.க., மாநில துணை பொது செயலர் யாக்கூப் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். தொடர்ந்து, 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.






      Dinamalar
      Follow us