/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
மாணவ --- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
/
மாணவ --- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஆக 04, 2025 11:47 PM
உத்திரமேரூர், திருப்புலிவனத்தில் பழங்குடியின மாணவ -- மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் நேற்று வழங்கப்பட்டன.
உத்திரமேரூர் தாலுகா, திருப்புலிவனம் கிராமத்தில், 'உயிர் பவுன்டேசன்' சார்பில், பழங்குடியின மாணவ - மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
உயிர் பவுன்டேசன் தலைவர் செலின் ரூபினின் தலைமை தாங்கினார். பேக்ஸ் டெக்னாலஜி நிறுவன இயக்குனர் குஹன் பங்கேற்று, 545 பழங்குடியின மாணவ - மாணவியருக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
அதில் மணல்மேடு, மலையாங்குளம், புத்தளி, புலிவாய், வெங்கச்சேரி, திருப்புலிவனம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மாணவ - மாணவியருக்கு, நோட்டு, புத்தகம், பென்சில் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
உயிர் பவுன்டேசன் துணைத் தலைவர் கிறிஸ்டினா ஜஸ்டின் உட்பட பலர் பங்கேற்றனர்.