/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
100 நாள் பணிக்கு உபகரணங்கள் வழங்கல்
/
100 நாள் பணிக்கு உபகரணங்கள் வழங்கல்
ADDED : அக் 28, 2024 11:47 PM
உத்திரமேரூர்: மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிக்காக ஆண்டுதோறும் ஊராட்சிகளுக்கு, மண்வெட்டி, கடப்பாரை, கூடை உள்ளிட்ட 17 வகையான உபகரண பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அதன் ஒரு பகுதியாக, உத்திரமேரூர் ஒன்றியத்தில், 2023- - 24ம் ஆண்டுக்கான உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம் மற்றும் உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் ஆகியோர் பங்கேற்று, ஒன்றியத்திற்கு உட்பட்ட 73 ஊராட்சிகளுக்குமான உபகரண பொருட்களை வழங்கினர்.
உத்திரமேரூர் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா, உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

