sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

போன் எடுக்காத செயல் அலுவலர் உத்திரமேரூரில் மக்கள் வாக்குவாதம்

/

போன் எடுக்காத செயல் அலுவலர் உத்திரமேரூரில் மக்கள் வாக்குவாதம்

போன் எடுக்காத செயல் அலுவலர் உத்திரமேரூரில் மக்கள் வாக்குவாதம்

போன் எடுக்காத செயல் அலுவலர் உத்திரமேரூரில் மக்கள் வாக்குவாதம்


ADDED : அக் 30, 2025 12:01 AM

Google News

ADDED : அக் 30, 2025 12:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் நடந்த வார்டு சபை கூட்டத்தில், குறைகளை தெரிவிக்க போன் செய்தால், செயல் அலுவலர் எடுப்பதில்லை என்று, மக்கள் குற்றஞ்சாட்டினர்.

உத்திரமேரூர் பேரூராட்சி, 5-வது வார்டில், சிறப்பு வார்டு சபை கூட்டம் நேற்று நடந்தது. வார்டு கவுன்சிலர் பாரதி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் பழனிகுமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நடந்த விவாதம்:

வார்டு மக்கள்: 5-வது வார்டு முழுதும், முறையாக கொசு மருந்து அடிப்பதில்லை.

செயல் அலுவலர் பழனிகுமார்: கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வார்டு மக்கள்: குடிநீர் குழாய் பதிக்க உடைக்கப்பட்ட தெருக்களை சீரமைக்காமல் உள்ளதால், வாகனங்களை ஒட்டி செல்ல சிரமமாக உள்ளது.

செயல் அலுவலர் பழனி குமார்: பேரூராட்சி முழுதும் உடைக்கப்பட்ட தெருக்களில் புதுபிக்கும் பணிகள் படிப்படியாக நடந்து வருகிறது. இந்த வார்டிலும் விரைவில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும்.



வார்டு மக்கள்: அரசு தொடக்கப் பள்ளியில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டுள்ளதால், பள்ளி மாணவ -- மாணவியர் கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கழிப்பறையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

செயல் அலுவலர் பழனிகுமார்: கழிப்பறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வார்டு மக்கள்: வார்டு குறைகளை தெரிவிக்க போன் செய்தால், செயல் அலுவலர் போனை எடுக்காமல் உள்ளார்.

வார்டு கவுன்சிலர் பாரதி: குறைகளை தெரிவிக்க நான் போன் செய்யும்போதே, செயல் அலுவலர் எடுக்காமல் இருப்பார் என்று மக்களை நோக்கி கூறினார்.

இதையடுத்து, செயல் அலுவலருக்கும், வார்டு கவுன்சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அத்துடன் கூட்டம் முடிந்தது.






      Dinamalar
      Follow us