sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் பொது கழிப்பறை

/

பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் பொது கழிப்பறை

பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் பொது கழிப்பறை

பயன்பாட்டிற்கு வராமல் வீணாகும் பொது கழிப்பறை


ADDED : மே 08, 2025 12:58 AM

Google News

ADDED : மே 08, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியநத்தம்:காஞ்சிபுரம் ஒன்றியம், காலுார் ஊராட்சி, பெரியநத்தம் கிராமம், பொன்னியம்மன் கோவில் எதிரில், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கிராமத்தினரின் வசதிக்காக, 'ஸ்வச் பாரத் மிஷன் கிராமின்', மாவட்ட ஊராட்சி மற்றும் 2022- - 23ம் நிதியாண்டு, 15வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், 7.85 லட்சம் ரூபாய் செலவில் சமுதாய கழிப்பறை கட்டப்பட்டது.

கட்டுமானப் பணி முடிந்து ஆறு மாதமாகியும், கழிப்பறை திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை.

இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் இயற்கை உபாதை கழிக்க மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும், கட்டடமும் பயன்பாடின்றி வீணாகி வருகிறது. எனவே, பெரிய நத்தம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:

பெரியநத்தம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டடத்தை, மாவட்ட பஞ்சாயத்து அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர். ஆய்வு செய்தபின், அடுத்த வாரத்தில் கழிப்பறை கட்டடம் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us