sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

நர்சிங் சீட் கேட்டு மிரட்டல் புரட்சி பாரதம் நிர்வாகி கைது

/

நர்சிங் சீட் கேட்டு மிரட்டல் புரட்சி பாரதம் நிர்வாகி கைது

நர்சிங் சீட் கேட்டு மிரட்டல் புரட்சி பாரதம் நிர்வாகி கைது

நர்சிங் சீட் கேட்டு மிரட்டல் புரட்சி பாரதம் நிர்வாகி கைது


ADDED : ஜூலை 12, 2025 09:36 PM

Google News

ADDED : ஜூலை 12, 2025 09:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காஞ்சிபுரம்:தனியார் கல்லுாரி நர்சிங் சீட் கேட்டு, கல்லுாரி நிர்வாக அதிகாரிகளை மிரட்டிய, புரட்சி பாரதம் கட்சி ஒன்றிய செயலரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, தண்டலம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத், 38. புரட்சி பாரதம் கட்சி ஒன்றிய செயலர்.

இவர், தண்டலம் கிராமத்தில் உள்ள சவீதா தனியார் மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், அதே பகுதியைச் சேர்ந்த மாணவருக்கு, பி.எஸ்சி., நர்சிங் சீட் கொடுக்கும் படி நிர்வாக அதிகாரிகளிடம் தகராறு செய்துள்ளார்.

இதற்கு, தனியார் கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் சீட் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு, டெண்டர் வழங்கும் படி கோபிநாத் மிரட்டி உள்ளார்.

இதுகுறித்து, தனியார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அலுவலக அதிகாரி சண்முகம் என்பவர், ஸ்ரீபெரும்புதுார் போலீசில் அளித்த புகாரின்படி, கோபிநாத் என்பரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us