sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

களியாம்பூண்டி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை

/

களியாம்பூண்டி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை

களியாம்பூண்டி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை

களியாம்பூண்டி அரசு பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை


ADDED : அக் 23, 2025 09:10 PM

Google News

ADDED : அக் 23, 2025 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்: களியாம்பூண்டி அரசு பள்ளியில் 1.60 லட்சம் ரூபாய் செலவில் அமைக் கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவை நேற்று பயன்பாட்டிற்கு வந்தது.

உத்திரமேரூர் தாலுகா, களியாம்பூண்டி கிராமத்தில், அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 500 மாணவ -- மாணவியர் படித்து வருகின்றனர்.

இங்கு, நீண்ட நாட்களாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து, அதே கிராமத்தைச் சேர்ந்த தனி நபர் ஒருவர், 1.60 லட்சம் ரூபாய் செலவில், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்க முன் வந்தார்.

அதன்படி, புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் சண்முகம் தலைமை தாங்கினார். நன்கொடையாளர் சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மனோகர் முன்னிலை வகித்தனர்.

களியாம்பூண்டி ஊராட்சி தலைவர் வளர்மதி பங்கேற்று, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேவையை பயன் பாட்டுக்கு கொண்டு வந்தார்.






      Dinamalar
      Follow us