/
உள்ளூர் செய்திகள்
/
காஞ்சிபுரம்
/
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்
/
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்
காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் நாளை புஷ்ப பல்லக்கு உத்சவம்
ADDED : மார் 20, 2025 08:31 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், நடப்பாண்டிற்கான மாசி மாத, பிரம்மோத்சவம், கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளிய காமாட்சியம்மன் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வந்தார்.
இதில் ஒன்பதாம் நாள் பிரபல உத்சவமான வெள்ளி ரதம் உத்சவம் கடந்த 11ம் தேதி விமரிசையாக நடந்தது 10ம் நாள் உத்சவமான கடந்த 12ம் தேதி, காலையில் சரபம் வாகனமும், தொடர்ந்து பஞ்சகங்கை தீர்த்தத்தில் தீர்த்தவாரியும் நடந்தது.
கடந்த 14ம் தேதி காலை மூலவர் காமாட்சியம்மனுக்கு விஸ்வரூப தரிசனம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அன்று இரவு, விடையாற்றி உத்சவம் துவங்கியது. இதில், தினமும் இரவு 7:00 மணிக்கு லட்சுமி, சரஸ்வதி தேவியுடன், காமாட்சியம்மன் சுக்ரவார மண்டபத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் ஊஞ்சல் சேவை உத்சவத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இன்று சந்தனகாப்பு விடையாற்றி உத்சவம் நடக்கிறது. நிறைவு நாளான நாளை, இரவு 7:00 மணிக்கு, புஷ்ப பல்லக்கு உத்சவம் நடக்கிறது. இதில், பலவித மலர்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் எழுந்தருளும் காமாட்சியம்மன் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.