sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

தண்டவாளத்தில் சரக்கு லாரி பழுதுரயில் ஒன்றரை மணி நேரம் தாமதம்

/

தண்டவாளத்தில் சரக்கு லாரி பழுதுரயில் ஒன்றரை மணி நேரம் தாமதம்

தண்டவாளத்தில் சரக்கு லாரி பழுதுரயில் ஒன்றரை மணி நேரம் தாமதம்

தண்டவாளத்தில் சரக்கு லாரி பழுதுரயில் ஒன்றரை மணி நேரம் தாமதம்


ADDED : ஜூலை 25, 2011 01:57 AM

Google News

ADDED : ஜூலை 25, 2011 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுராந்தகம்:அச்சிறுப்பாக்கத்தில், தண்டவாளத்தை கடக்க முயன்ற சரக்கு லாரி பழுதடைந்து நின்றது.

இதனால், ஒன்றரை மணி நேரம் பாசஞ்சர் ரயில் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.அச்சிறுப்பாக்கத்தில் நேற்று காலை 6 மணிக்கு, சிமென்ட் மூட்டைகள் ஏற்றிச் சென்ற லாரி, வெங்கடேசபுரம் சாலையில் உள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றது. அப்போது, திடீரென பழுதடைந்த லாரி, தண்டவாளத்திலேயே நின்று விட்டது.இதையடுத்து, விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த பாசஞ்சர் ரயில், அச்சிறுப்பாக்கத்தில் நிறுத்தப்பட்டது. இதேபோல், மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், ஆகிய ரயில்கள், வழியிலேயே நிறுத்தப்பட்டன.பழுதடைந்து நின்ற லாரியை உடனடியாக அகற்ற முடியவில்லை. அச்சிறுப்பாக்கம் போலீசார் மற்றும் பொதுமக்கள் லாரியில் இருந்து சிமென்ட் மூட்டைகளை இறக்கிவிட்டு, 7.30 மணிக்கு லாரி தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இதனால், ரயில்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.






      Dinamalar
      Follow us