sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

காஞ்சிபுரம்

/

வடிகால்வாய் வசதி இல்லாததால் கல்வெட்டு கோவிலில் தேங்கும் மழைநீர்

/

வடிகால்வாய் வசதி இல்லாததால் கல்வெட்டு கோவிலில் தேங்கும் மழைநீர்

வடிகால்வாய் வசதி இல்லாததால் கல்வெட்டு கோவிலில் தேங்கும் மழைநீர்

வடிகால்வாய் வசதி இல்லாததால் கல்வெட்டு கோவிலில் தேங்கும் மழைநீர்


ADDED : மே 15, 2025 01:01 AM

Google News

ADDED : மே 15, 2025 01:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்திரமேரூர்:உத்திரமேரூரில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வைகுண்ட பெருமாள் கோவில் எனப்படும் குடவோலை முறை கல்வெட்டு கோவில் உள்ளது.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், 1,000 ஆண்டுகளுக்கு முன் முதலாம் பராந்தக சோழனின் ஆட்சி காலத்து, தேர்தல் முறையை விளக்கும் கல்வெட்டு உள்ளது.

இந்த கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து தினமும், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இங்கு, வடிகால்வாய் வசதி இல்லாமல் உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த மழையினால்,கோவில் வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால், கோவிலுக்கு சுற்றுலா வரும் பயணியர், சிரமத்திற்கு உள்ளாகினர்.

மழை நேரங்களில் இதேபோல வளாகத்தில் மழைநீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. எனவே,குடவோலை முறை கல்வெட்டு கோவில் வளாகத்தில், வடிகால் வசதி ஏற்படுத்த, சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us